இலங்கையில் முன்கூட்டியே அதிபர் தேர்தல்?- நிராகரிக்கிறார் சிறிசேனவின் சகா

இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பதவியேற்று நேற்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. நான்கு வருடங்களுக்குப் பின்னர், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் அதிகாரம் இருப்பதால், விரைவில் அதற்கான அறிவிப்பை அதிபர் சிறிசேன வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதிபர் தேர்தலுக்கான அரசிதழ் அறிவிப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அதிபர் சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான மகிந்த சமரசிங்க, நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

“சட்டரீதியான அதிகாரம் அதிபர் சிறிசேனவுக்கு இருந்தாலும், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தும் எண்ணம் அவருக்கு இல்லை.

அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதமே முடிகிறது. வரும் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரிலேயே தேர்தலுக்கான அழைப்பை அவர் வெளியிடுவார்.” என்றும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அதிபர் சிறிசேனவுக்கு தென்னிலங்கையில் மாத்திரமன்றி, வடக்கிலும் பிரபலம் உள்ளதால், அவரே சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு என்னவென்பது தனக்குத் தெரியாது என்றும், மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds