Jun 29, 2019, 10:12 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கனமழை காரணமாக காம்பவுன்ட் சுவர் இடிந்ததில், தூங்கிக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. Read More
Jun 24, 2019, 18:05 PM IST
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட கர்நாடக பகுதிகளான பெல்லாரி,பெல்காம் கொப்பல், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில பகுதிகளில் வாகனங்கள் ஆற்றை கடக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன Read More
Jun 13, 2019, 11:32 AM IST
நாட்டிங்ஹாமில் நான்கு நாட்களாக விடாது பெய்யும் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது Read More
Jun 13, 2019, 11:01 AM IST
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் Read More
Jun 11, 2019, 12:56 PM IST
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More
Jun 11, 2019, 10:32 AM IST
குற்றாலத்தில் சீசன் லேட்டாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய ஓரிரு நாளிலேயே சீசன் களைகட்டத் தொடங்க் யுள்ளது. அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் குற்றாலப் பிரியர்கள் இப்போதே டூர் பிளானுக்கு தயாராகி வருகின்றனர் Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்திருந்தது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 23, 2019, 14:21 PM IST
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து சில பகுதிகளில் பரவலாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
Apr 17, 2019, 13:41 PM IST
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது Read More