Jul 21, 2019, 12:16 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jul 21, 2019, 10:17 AM IST
தமிழகத்தில் பாஜகவுக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்து, இந்தித் திணிப்பாகட்டும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் என மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எத்தனை கடும் எதிர்ப்புகள் வந்தாலும் வக்காலத்து வாங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அந்த வகையில் இப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசுவதை விமர்சித்துள்ளார். தமிழால் அரியணை ஏறியவர்கள், தமிழை அரியணை ஏற்றாதது ஏன்? என்றும் இதுதான் தமிழ்ப்பற்றா? என்றும் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.தம Read More
Jul 20, 2019, 10:49 AM IST
அத்திவரதர் தரசனத்திற்கு வராமல் முதியோர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமென்று காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 20, 2019, 09:36 AM IST
நாட்டில் 134 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியாத குழப்பம் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில், பிரியங்கா காந்தி இந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசாரிடம் எழுந்துள்ளது. Read More
Jul 19, 2019, 22:51 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்தும் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் விவாதம் இரவு வரை நீடித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல், திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் குமாரசாமி அரசு மேலும் 2 நாட்களுக்கு தப்பிப் பிழை Read More
Jul 19, 2019, 14:35 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று கூறி, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் இன்றைக்குள் வாக்கெடுப்பு நடைபெறுமா? ஆளுநர் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. Read More
Jul 19, 2019, 10:37 AM IST
அத்திவரதர் தரிசன பக்தர்கள் 4 பேர் சாவுக்கு அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்தான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். Read More
Jul 18, 2019, 21:18 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 18, 2019, 16:56 PM IST
வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. Read More
Jul 18, 2019, 15:26 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட மதிய உணவு இடைவேளைக்காக பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More