May 10, 2019, 11:39 AM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More
May 8, 2019, 14:46 PM IST
தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு Read More
May 7, 2019, 15:25 PM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் நடைபெறப்போகும் 4 தொகுதிகள் என 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவே வெற்றி பெறும் என்றும், திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார் Read More
May 4, 2019, 21:22 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.தனது பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தினமும் புதுப்புது யுக்திகளை கையாள்வது பொது மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Read More
May 4, 2019, 08:19 AM IST
சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் Read More
May 3, 2019, 19:59 PM IST
அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 29, 2019, 12:28 PM IST
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு தமிழக அரசு சார்பில் கெளரவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் தமிழக அரசு, கோமதி விரும்புகிற அளவுக்கு போதிய உதவிகளை அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More
Apr 22, 2019, 10:38 AM IST
திண்டிவனத்தில் காதல் கணவர் திட்டியதால் விரக்தியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 18, 2019, 09:55 AM IST
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார் Read More