Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More
Aug 13, 2019, 14:46 PM IST
காஷ்மீர் நிலைமை பற்றி தவறாக பேசி வரும் ராகுல் காந்தி உண்மை நிலையை நேரில் கண்டறிய வரத் தயாரா? தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுள்ள ராகுல், தனி விமானம் எல்லாம் வேண்டாம். அங்குள்ள மக்களையும், படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேச அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் வரத் தயார் என்று பதிலத்துள்ளார். Read More
Aug 12, 2019, 13:26 PM IST
காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. Read More
Aug 12, 2019, 13:14 PM IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Aug 11, 2019, 12:23 PM IST
காஷ்மீரில் கல்வீச்சு, எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினர் சுடுவது போன்றும் பி.பி.சி. செய்தி நிறுவனம், வீடியோக்களை வெளியி்ட்டிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது. Read More
Aug 10, 2019, 21:14 PM IST
ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Aug 10, 2019, 13:58 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More
Aug 9, 2019, 21:59 PM IST
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Aug 9, 2019, 21:28 PM IST
ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More