Jun 25, 2019, 20:48 PM IST
ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 25, 2019, 11:37 AM IST
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கியுள்ளார். Read More
Jun 24, 2019, 12:20 PM IST
குஷ்பு தன் வீட்டின் அருகே கேட்பாரற்று கிடந்த சரக்கு வேனை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சென்னை போலீஸ் உடனடியாக கவனிக்கவும்’ என்று பதிவிட்டார். இதையடுத்து, அந்த வேனை அகற்றிய போக்குவரத்து போலீசார், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர் Read More
Jun 21, 2019, 21:01 PM IST
மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jun 11, 2019, 09:37 AM IST
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது Read More
Jun 5, 2019, 21:32 PM IST
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More
Jun 5, 2019, 13:36 PM IST
'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க! Read More
Jun 1, 2019, 20:48 PM IST
அ.ம.மு.க.வை அடுத்து எப்படி நடத்துவது? அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைக்க வேண்டுமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் டி.டி.தினகரன் Read More
May 26, 2019, 13:52 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். Read More