Apr 13, 2019, 08:19 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலையில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மக்கள், ‘‘தேர்தலுக்கு மட்டும் வருகிறீர்களே, இத்தனை நாளா எங்க பிரச்னையை கேட்க யாராவது வந்தீர்களா?’’ என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More
Apr 12, 2019, 15:15 PM IST
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் இது வரை நடத்திய சோதனைகளில் ரூ.150 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More
Apr 12, 2019, 12:56 PM IST
‘‘நாங்க அம்மா சொன்ன திட்டங்களைத்தான் நிறைவேற்றி வருகிறோம். மேலே இருந்து அம்மா பார்க்கிறாங்க. அதனால பயந்துகிட்டுதான் வேலை பார்க்கிறோம்...’’ என்று சொல்கிறார் ஓ.பி.எஸ் Read More
Apr 11, 2019, 13:34 PM IST
தேனி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்த போது தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் உருவியதால் நடிகர் கார்த்திக் ஷாக் ஆனார். நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார் Read More
Apr 11, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார். Read More
Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
Apr 10, 2019, 13:16 PM IST
மே 23ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வரப் போவது நிச்சயம் என்று திடீரென தி.மு.க. புள்ளிகள் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான். Read More
Apr 10, 2019, 11:40 AM IST
மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ். டீம் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். Read More
Apr 9, 2019, 12:10 PM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்காசி மக்களவை தொகுதி மீது தற்போது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. அதற்கு முதல் காரணம் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இந்த தொகுதியில் போட்டியிடுவதுதான். Read More