Jun 13, 2019, 17:56 PM IST
பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடரவேண்டும் என, டெல்லியில் நடைபெற்ற மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jun 6, 2019, 16:49 PM IST
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More
Jun 1, 2019, 11:50 AM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தப் பதவியையும் ஏற்க சம்மதிக்காததால் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
May 30, 2019, 13:56 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, ஒட்டு மொத்த கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தும் தனது முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில், காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தியின் பலே த தான் காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
May 29, 2019, 16:15 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. Read More
May 29, 2019, 15:29 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தங்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர் Read More
May 29, 2019, 13:22 PM IST
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். நாங்குனேரி தொகுதியில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இடைத்தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார் Read More
May 28, 2019, 09:21 AM IST
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 28, 2019, 08:48 AM IST
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More
May 27, 2019, 09:32 AM IST
ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், கட்சியை வளர்ப்பதற்குப் பதில் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். சீட் தராவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாகக் கூட ப.சிதம்பரம் மிரட்டினார் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More