May 26, 2019, 10:58 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More
May 25, 2019, 10:34 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர் Read More
May 25, 2019, 10:27 AM IST
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க.வுடன் மட்டுமின்றி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியுமா என்ற விவாதங்கள் மீண்டும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
May 17, 2019, 09:37 AM IST
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 9, 2019, 14:17 PM IST
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
May 8, 2019, 15:33 PM IST
தமிழகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. Read More
May 8, 2019, 15:17 PM IST
தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் Read More
May 8, 2019, 10:27 AM IST
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More