Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 5, 2020, 15:09 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 5, 2020, 14:36 PM IST
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. Read More
Apr 5, 2020, 14:32 PM IST
பிரதமர் அழைப்பு விடுத்துள்ளபடி, மக்கள் இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றலாம். அதேசமயம், ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களை வழக்கம் போல் பயன்படுத்தலாம். அதே போல், தெருவிளக்குகள் அணைக்கப்படாது. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கும். Read More
Apr 5, 2020, 12:21 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது Read More
Apr 5, 2020, 10:51 AM IST
கொரோனா பாதிப்புக்காகப் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கான் அளித்த நிதி மற்றும் உதவிகளுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார். Read More
Apr 4, 2020, 13:56 PM IST
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 4, 2020, 13:10 PM IST
பிரதமர் மோடி 5ம் தேதி விளக்கு ஏற்ற சொல்லி மக்களுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். கொரொனாவிலும் ஒற்றுமையாக வீட்டில் இருக்கிறோம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த ஐடியாவை மோடி தெரிவித்திருக்கிறார். Read More
Apr 4, 2020, 13:06 PM IST
கொரொனாவில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாளை 5ம் தேதிஇருவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கை 9 நிமிடம் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Apr 4, 2020, 11:02 AM IST
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில், இதை நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம் என்று கூறி ஆத்மா படத்தில் இடம் பெறும் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று தான் நடித்த பாடலை வெளியிட்டிருக்கிறார். Read More