பிரபாகரன், பொட்டு அம்மான் தப்பிச் செல்ல முயற்சித்தது உண்மை... ஆனால்? சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகளின் தலைவர் சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது; பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார் என முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More


விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லவே இல்லை..அடித்து சொல்லும் இலங்கை ராணுவ தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read More


புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் நார்வேயில் உயிருடன் இருக்கிறார்- கருணா பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளருமான பொட்டு அம்மான் உயிருடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கருணா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். Read More