விஜய், அஜித் வரிசையில் சூர்யா - காப்பான் படத்துக்காக செய்த காரியம்!

Suriya gives Biriyani treat to Kaappaan Team

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் "காப்பான்". இது இயக்குநர் கேவி ஆனந்த் சூர்யா இணையும் மூன்றாவது படம். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் ஆர்யா, சாயுஷா, சமுத்திரகனி என ஒரு நட்சததிர பட்டாளமே நடித்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த படத்தின் முக்கால்வாசி படபிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில பாடல் காட்சிகளே பாக்கி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி மோகன்லால் பிரதமராகவும் அவருக்கு காவல் கொடுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான சூர்யாவின் தோற்றம் ரசிகர்களிடம் சிறப்பான வரேற்பைப் பெற்றுள்ளது.

அதாவது காக்க காக்க படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது இருந்த தோற்றத்திலேயே இப்போதும் இருக்கிறார். இதற்கிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா செய்த மற்றொரு காரியம் தற்போது வைரலாகியுள்ளது.

படப்பிடிப்பின் போது தன்னுடன் பணியாற்றிய பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் சூர்யா. வழக்கமாக விஜய் அஜித் தான் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து வந்தனர். இப்போது சூர்யாவும் விருந்து கொடுத்து நன்மதிப்பை பெற்றுள்ளார்.

You'r reading விஜய், அஜித் வரிசையில் சூர்யா - காப்பான் படத்துக்காக செய்த காரியம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்