விக்ரம், சிம்பு, கார்த்தி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் மணிரத்னத்தின் கனவுப்படம்

mani ratnam started ponniyin selvan works

செக்கசிவந்த வானம் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு, அரவிந்த்சாமி என பல நடிகர்கள் நடிக்க உருவான படம் தான் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்துக்குப் பிறகு, மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பட வேலைகளில் முழு வேகத்தில் இறங்கியிருக்கார். இந்தப் படமும் மல்டி ஸ்டார் காஸ்டிங் தான்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விக்ரம், சிம்பு, கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கேட்டாலும் பதில் இல்லை, யாரும் வெளியில் நேரடியாக பேசவும் இல்லை. மணிரத்னமும் வழக்கம் போல எதைப்பற்றியும் பேசாமல் இருக்கிறார். அதையே ஒரு உத்தியாகவும் கடைபிடித்துவருகிறார்.

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் மற்றுமொரு நடிகரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். கட்டப்பா நாயகன் சத்யராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அதுவும், பொன்னியின் செல்வன் கதையில் வரும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் கதையில் வரும் மிக முக்கிய கேரக்டரும், வலுவான கதாபாத்திரமும் பெரிய பழுவேட்டரையருடையது.

மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பொன்னியின் செல்வன் படத்தை எப்பொழுது இயக்க நேர்ந்தாலும் சத்யராஜ் தான் அந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தாராம் மணிரத்னம். அது தற்பொழுது நிறைவேறிவிடும் என்றே சொல்கிறார்கள்.

You'r reading விக்ரம், சிம்பு, கார்த்தி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் மணிரத்னத்தின் கனவுப்படம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாநில முதல்வர்களின் செயல்பாடு எப்படி எடப்பாடி பழனிச்சாமி க்கு கடைசி இடமாம் - மக்கள் வாக்கெடுப்பில் ஷாக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்