சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும்.. ஜோதிகா சொல்கிறார்..

நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் திரைக்கு வந்துள்ளது. மைத்துனர் கார்த்தியுடன் நடித்ததுபற்றி ஜோதிகா கூறியது:

தம்பி படத்தில் கார்த்தியின் அக்காவாக நடிக்கிறேன். ஆனால் அவரை விட இளமையாக தெரிவேன். இரண்டு குடும்பத்துக்கு இடையே நடக்கும் சம்பவங்களே கதை. படத்திற்கு தம்பி என டைட்டில் அமைந்தது சந்தோஷமாக இருக்கிறது. சூர்யாவுடன் மீண்டும் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவருடன் நடிப்பது கஷ்டம். கணவன் மனைவிக்கு இடையே எப்படி சண்டை வருமோ அதுபோல் நிறைய சண்டை வரும். லேடி கமல் என்று என்னை (ஜோதிகா) சொல்லலாமா என்கின்றனர். 'லேடி கமல்' என்றால், ஒரே ஆள் ஊர்வசி மேடம் தான்.

நான் சிறு வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். அப்போது என் தம்பி மிகவும் சிறியவன். நான் சென்னையிலேயே இருந்ததால் அவனுடன் போனில்தான் பேசுவேன். இப்படத்திற்கு அவன் தயாரிப்பாளராக இருந்தது சந்தோஷம். இதனால் அவன் என்னுடன் அதிக நேரம் இருக்க முடிந்தது. கதைகள் தேர்வு செய்ததுபற்றி கேட்கிறார்கள். எனக்கேற்ற கதைகளாத்தான் தேர்வு செய்கிறேன். முன்பெல்லாம் செய்ததுபோல் குறும்பு செய்து இப்போது படங்களில் நடிப்பதில்லை. எனக்கும் வயதாகிறது அல்லவா?

இவ்வாறு ஜோதிகா கூறினார்.

You'r reading சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும்.. ஜோதிகா சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நான் இந்தியன் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? மதத்தில் இணையாத நடிகை கோபம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்