இன்னொரு குடும்பத்தை காப்பாற்ற சக்தி இல்லை.. நடிகை கங்கனா ரனாவத் டயர்டு..

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். 15வது வயதில் குடும்பத்திலிருந்து வெளியேறி நடிக்க வந்தவர் கங்கனா. அவமானங்களை எதிர்கொண்டு அதை எதிர்த்து போராடி இன்று பிரபல நடிகைகள் வரிசை யில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். அவரது சம்பளம் பல கோடிகளாக அதிகரித்திருக் கிறது. பணத்துக்காக கஷ்டப்பட்டவர் இன்று கோடிகளுக்கு அதிபதி ஆனதையடுத்து அவர் இளவதில் பிரிந்து வந்த குடும்பத்தினரும் வந்து இணைந்திருக்கின்றனர். அவர்களை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் கங்கனா.
நினைத்தை சாதித்துவிட்டீர்கள், அடுத்து உங்கள் திருமணம்தானே? எப்போது திருமணம் செய்வீர்கள்? என்றுகேட்டதற்கு எதிர்பாராத பதில் அளித்து அதிர்ச்சி தந்திருக்கிறார் கங்கனா.

நடிகையாக வேண்டும் என்ற கனவு இப்போது பலித்திருக்கிறது. அதன் மூலம் சம்பாத்தியமும் வருகிறது. இப்போது கொஞ்சம் சுயநலவாதியாக இருக்க விரும்புகிறேன். பணம் வந்தபிறதான் எனது குடும்பமும் என்னுடன் இணைந்திருக்கிறது. இந்த வாழ்க்கையை நான் அனுபவிக்க விரும்புகி றேன். அதற்குள் திருமணம் செய்துகொண்டு இன்னொரு குடும்பம் அமைத்துக்கொண்டு அதை வழி நடத்தி காப்பாற்றும் சக்தியும் இல்லை, நேரமும் இல்லை. திருமணத்துக்கு இப்போது அதற்கு அவசரம் இல்லை. அதற்கான நேரம் வரட்டும் பார்க்கலாம். என்னை ஏற்றுக்கொண்டு வாழ்பவராக வந்தால் அதுபற்றி சிந்திப்பேன்' என்றார்.

You'r reading இன்னொரு குடும்பத்தை காப்பாற்ற சக்தி இல்லை.. நடிகை கங்கனா ரனாவத் டயர்டு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவில் ஓராயிரம் பழனிசாமிகள் இருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்