சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..

PM Narendra Modi mourns Sushant Singh Rajputs death

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். தனது இரங்கல் செய்தியில்,சுஷாந்த் சிங் ராஜ்புத்.. பிரகாசமான இளம் நடிகர் விரைவாகச் சென்றுவிட்டார். டிவியிலும், சினிமாவிலும் இவர் சிறப்பாக நடித்தார். திரையுலகில் அவரது வளர்ச்சி பலருக்கு முன்னுதாரணமாக இருந்தது. பல மறக்க முடியாத நடிப்பை அவர் வழங்கி இருக்கிறார். அவரது மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்மாவுக்கு கடைசி கடிதம் எழுதிய சுஷாந்த்.. பழைய கனவுகள் கண்ணீர் துளியில் ஆவியாகி மறைகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்