மீண்டும் இணைந்த சசிகுமார் சமுத்திரக்கனி கூட்டணி!

நாடோடிகள் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சசிகுமார், பரணி, கஞ்சா கருப்பு நடித்து, சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்தது நாடோடிகள் திரைப்படம். பெரும் வசூலை வாரிக் குவித்த இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலை நடந்து வருகிறது என்று படக்குழு சார்பில் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்கும் முன்னரே ஸ்கிரிப்ட் வேலையை முடித்த சமுத்திரக்கனி இன்று முதல் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

இரண்வாவது பாகத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நந்தகோபால் படத்தைத் தயாரிக்கிறார். சீக்கிரமே ஷூட்டிங் முடிந்து நாடோடிகள்-2 வெள்ளித்திரைக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

You'r reading மீண்டும் இணைந்த சசிகுமார் சமுத்திரக்கனி கூட்டணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி அணிக்கு குக்கர் சின்னம் - ஒகே சொன்னது உயர்நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்