பாஜக மிரட்டலுக்கு பயந்ததா மெர்சல் திரைப்பட குழு!

விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பலகட்ட சோதனைகளை கடந்து தீபாவளி அன்று வெளியானது.

விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பலகட்ட சோதனைகளை கடந்து தீபாவளி அன்று வெளியானது.

ரீலிஸுக்கு இரண்டு நாள் முன்பு கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் விஜய். ஆனாலும், படத்தின் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

சமீபத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்நிலையில், படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பாஜகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மேலும், மெர்சல் படத்தில் இருந்து ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள், முழுமையாக நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று மாலை முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் நீக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் தயாரிப்பாளர் வசனத்தை நீக்கியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

You'r reading பாஜக மிரட்டலுக்கு பயந்ததா மெர்சல் திரைப்பட குழு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடும்பத்துடன் அஜித்; ரசிகருடன் சிவகார்த்திகேயன் - மெர்சல் திருவிழா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்