முதலில் சூர்யா அடுத்து சிவகார்த்திகேயன்! தமிழ்ப் படங்களின் வேட்டையில் சாய் பல்லவி!

அதிரடியாக தமிழ்ப் படங்களைக் கைப்பற்றி மார்க்கெட்டில் நிற்கும் தமிழ் நடிகைகளுக்கு சவால் விடுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

மலையாளத் திரைஉலகில் மலர் டீச்சராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர் படைகளையும் கைப்பற்றிய தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் அறிமுகமானாலும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பம் எனத் தூதுவிட்டவருக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது.

தமிழில் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' திரைப்படத்தில் நடித்து முடித்து வெளியீடுக்காகக் காத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா உடன் 'என்.பி.கே' திரைப்படத்தில் சாய் பல்லவி கமிட் ஆகியுள்ளார்.

இதையடுத்து தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்திலும் சாய் பல்லவி இணைந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேய தற்போது நடித்து வரும் சீமராஜா, மற்றும் பெயர் வெளியிடப்படாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படங்களை முடித்தவுடன் இயக்குநர் ராஜேஷ் உடன் இணைகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading முதலில் சூர்யா அடுத்து சிவகார்த்திகேயன்! தமிழ்ப் படங்களின் வேட்டையில் சாய் பல்லவி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `இது கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட கலங்கம்!’- கதறும் வார்னர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்