பவன் கல்யாண் அண்ணனா? - செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீரெட்டி

பவன் கல்யாணை அண்ணன் என்று கூறியதற்கான செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, செய்தியாளர்கள் சந்திப்பின்போது செருப்பால் தன்னையே அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவன் கல்யாணை அண்ணன் என்று கூறியதற்கான செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, செய்தியாளர்கள் சந்திப்பின்போது செருப்பால் தன்னையே அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி வந்தார்.

அதன்படி முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் தெரியும்படியான ஒரு புகைப்படத்தை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டார். தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்த பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார். ஆனால் தொடர்ந்து ஸ்ரீரெட்டி மீது குற்றம் சுமத்தி வந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறி சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறும் நடிகை ஸ்ரீரெட்டி, அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்

இதற்கிடையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் என கருத்து கூறியிருந்தார். தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது எனவும் அவர் பேசினார்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பவன் கல்யாண் அண்ணனா? - செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீரெட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு எதிரொலி: முடிவுக்கு வந்தது தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்