பிரபல தமிழ் நடிகரின் தங்கைக்கு லாட்டரியில் 30 கோடி பரிசு

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனாவுக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ₹ 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.அபுதாபியில் டூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட் லாட்டரி அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரிசுத் தொகையாகப் பல கோடிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த பிக் டிக்கெட் லாட்டரியில் பரிசுத் தொகை இந்தியர்களுக்குத் தான் கிடைத்து வருகிறது. இம்முறையும் இந்த பிக் டிக்கெட்டில் பெரும்பாலான பரிசுகள் இந்தியர்களுக்குக் கிடைத்துள்ளது.

இதில் நேற்று நடந்த குலுக்கலில் முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் தங்கை ஆவார். ஆர்யாவின் தங்கை தஸ்லீனா கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய கணவர் அப்துல் கத்தாப் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26ம் தேதி இவர் ஆன்லைன் மூலம் பிக் டிக்கெட் லாட்டரி வாங்கினார். இவர் வாங்கிய டிக்கெட்டுக்கு தற்போது முதல் பரிசான ₹ 30 கோடி கிடைத்துள்ளது. இந்த விவரத்தை நேற்று இரவு பிக் டிக்கெட் நிறுவனத்தினர் தஸ்லீனாவுக்கு போன் செய்து கூறியுள்ளனர். பிக் டிக்கெட் நிறுவனத்தினர் தனக்கு முதல் பரிசான 30 கோடி கிடைத்துள்ளது என்று போனில் கூறியதை தன்னால் முதலில் நம்ப முடியவில்லை என்று தஸ்லீனா கூறுகிறார். இம்முறை பிக் டிக்கெட் லாட்டரியில் அனைத்து பரிசுகளுமே இந்தியர்களுக்குத் தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரபல தமிழ் நடிகரின் தங்கைக்கு லாட்டரியில் 30 கோடி பரிசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனிப்பு பண்டம் கேட்டு அழுத 20 மாத குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற கொடூரம் தந்தை கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்