சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சிறைதண்டனை விதித்து எம்எல்ஏ எம்பிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா. இந்நநிறுவனம் 2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. இந்த படத்துக்காக ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கி இருந்தனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியிருந்தனர்.

ஆனால் பணத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக வழங்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனது. இதையடுத்து நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூட உத்தரவு வழங்கியது நீதிமன்றம்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் படி, ராதிகா, சரத்குமார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமாருக்கு தலா ஒரு வருடம், ராதிகாவுக்கும், ஸ்டீபனுக்கும் 2 வழக்குகளில் தலா ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 3 வருடத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை என்பதால், விதிமுறைகளின்படி, மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூன்று பேர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நேற்று சைக்கிள் இன்று விமானம் – 65வது படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்