விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்.. இனி யார் துணை?!.. விவேக் நண்பன் `செல் முருகன் உருக்கம்

விவேக் மறைவு தமிழ் சினிமாவுக்கு, இயற்கைக்கு எவ்வளவு பெரிய பேரிழப்போ, அதேபோல் நீண்ட காலம் அவருடன் பயணித்த அவருடைய நண்பரும், காமெடி நடிகருமான செல்முருகனுக்கும் அது மிகப்பெரிய இழப்பாகும். எப்போதும் விவேக் உடனேயே பயணிப்பவர் செல் முருகன். பல படங்களில் இருவரும் ஒன்றாக நகைசுவை செய்து மக்களை சிரிக்க வைத்தனர்.

இதற்கிடையே, விவேக்கின் இறப்பு அவரை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக்கின் இறுதிச் சடங்கு அன்று செல் முருகன் அழுதுகொண்டு இருந்த புகைப்படங்கள் மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே, விவேக் குறித்து தற்போது செல் முருகன் இணையத்தில் பெரிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். ``அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை…" என்ற குறிப்புடன் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ``ஓர் மரணம் என்ன செய்யும். சிலர் புரொஃபைலில் கருப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் Rip-புடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்.

ஆனால், அண்ணா… உண்மையான ஜீவன்.. உன் உயிர் தோழன் என் முருகனை… விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார் துணை… விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார் துணை.. யார் துணை…. யார் துணை?" என்று கூறியிருப்பது சோகத்தை ஆழ்த்தியிருக்கிறது.

You'r reading விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்.. இனி யார் துணை?!.. விவேக் நண்பன் `செல் முருகன் உருக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `ஸ்டைலிஷ் ஸ்டாலின்.. இது கொடைக்கானல் வைரல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்