இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கினார் நஸ்ரியா!

நடிகை நஸ்ரியா தனது ‘கூடே’ என்ற திரைப்படம் மூலம் சினிமா துறையில் தனக்கான இரண்டாம் கட்ட இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

நடிகை நஸ்ரியா சினிமா துறையில் அறிமுகமான சில ஆண்டுகளிலிலேயே தனது அழுத்தமான நடிப்பின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்தவர். சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் சினிமாக்களில் நடிப்பதை அறவே தவிர்த்துவிட்டார் நஸ்ரியா. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிப்பு உலகில் சிறந்த நாயகியாக வலம் வர களம் இறங்கியுள்ளார்.

கூடே என்ற மலையாளத் திரைப்படத்தில் விரைவில் ரசிகர்களுக்காக வருகிறார் நஸ்ரியா. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ், பார்வதி மேனன் ஆகியோர் உடன் நஸ்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கான வாழ்த்தாக நடிகர் பகத் பாசில் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான்கு ஆண்டுகளாக தனது பொன்னான நேரத்தை எங்கள் குடும்பத்துக்காக செலவிட்டு உள்ளாள் என் காதலுக்குரியவள். லவ் யூ நஸ்ரியா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கினார் நஸ்ரியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாணவர்களுக்கான மதிய உணவில் இனி.. சப்பாத்தி.. தயிர் சாதம்.. இனிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்