சென்னையில் கொள்ளையர்களை நடுங்க வைத்த கேமிரா!

கொள்ளையர்களை நடுங்க வைத்த கேமிரா!

சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்து பயந்து ஓடினர்.

சென்னை கேட்டூர்புரம் பகுதியை சேர்ந்த, அப்துல்லா, ரம்ஜான் பண்டிகையையொட்டி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை அறிந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து அப்துல்லா வீட்டிற்குள் புகுந்தனர்.

அங்கு வீடு முழுவதும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அச்சம் அடைந்த கொள்ளையர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இன்று காலை வீடு திரும்பிய அப்துல்லா, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, நகை பத்திரமாக இருப்பது தெரியவந்தது. ஆனால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்துல்லா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்துல்லா வீட்டில் பொருத்தபட்ட சிசிடிவி கேமிரா பதிவுகளை கைபற்றி காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading சென்னையில் கொள்ளையர்களை நடுங்க வைத்த கேமிரா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலை நடை திறப்பு...தேவபிரஸ்னம் தொடக்கம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்