பெரிய காயம் ஒன்றும் இல்லை!- தனுஷ் ட்விட்!

காயம் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நடிகர் தனுஷ் தான் நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மாரி-2 திரைப்பட ஷூட்டிங் களத்தில் பிஸியாக நடித்து வந்தார். அங்கு படப்பிடிப்புத் தளத்தில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் பரவியது.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் தனுஷின் நிலை குறித்து அறிந்துகொள்ள ட்விட்டரில் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து நடிகர் தனுஷ் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ல பதிவில், “என் நேசத்துக்குரிய ரசிகர்களே, பெரிய காயம் ஒன்றும் இல்லை. நான் நலமுடனே இருக்கிறேன். உங்களது பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றி. என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் தூண்கள் அனைவருக்கும் என் அன்புகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

You'r reading பெரிய காயம் ஒன்றும் இல்லை!- தனுஷ் ட்விட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தம்பியின் திருமணத்தை முடித்தார் ஆர்யா!!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்