சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் செந்தில் கணேஷ்!

செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார்!

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்.

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீசன் போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்தது. பெரும்பாலும் திரைஇசைப் பாடல்களைப் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் இதற்கு முன்னர் பங்குபெற்று வந்தனர்.

ஆனால், இந்த சீசனில் முதன் முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. அதனால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றதில் இருந்தே பலத்த வரவேற்பு இருந்தது. “ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப் போல...” என்ற பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் செந்தில்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வாக்களிப்பு முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், செந்தில் கணேஷ் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இரண்டாம் இடத்தை ரக்‌ஷிதா பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் செந்தில் கணேஷ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவில்களில் அகல்விளக்கு ஏற்ற தடை? சேம. நாராயணன் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்