காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர் விஜய்யின் தந்தை!

Actor Vijay father sign in police station

திருப்பதி கோயில் உண்டியல் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி கோயில் பற்றியும் அதனுடைய உண்டியல் குறித்து நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவதூறாக பேசியதாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த விருகம்பாக்கம் போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்பு அந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, இந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் பெற்றார். அதன் அடிப்படையில் இன்று காலை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்

You'r reading காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர் விஜய்யின் தந்தை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆா்.எஸ்.எஸ் மீது பகீரங்க குற்றசாட்டு! பினராயி விஜயன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்