ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் அலறிய மதுஷாலினி

mathushalini scared at shooting spot

ஷுட்டிங்கின் போது பிராங்க் செய்வதாக கையில் பல்லியை வைத்ததால் நடிகை மதுஷாலினி பயங்கரமாக அலறியுள்ளார்.

அவன் இவன், கமல்ஹாசனின் தூங்காவனம் போன்ற தமிழ்  படங்களில் நடித்தவர் மது ஷாலினி. ஆந்திராவை சேர்ந்த இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கில் அவர் சிறந்த கதாநாயகி என்றும் சொல்லலாம்.

தற்போது மது ஷாலினி ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென அலறியுள்ளார்.  அங்கிருந்தவர்கள் அவரிடம் செய்த பிராங்க் தான் அதற்கு  காரணம் என பின்னர் தெரியவந்தது.

கண்ணை மூடுங்கள் என அவரிடம் கூறிவிட்டு அவரின் கையில் பல்லியை வைத்துவிட்டனர். அதை பார்த்ததும் மதுஷாலினி அலறி பயந்து ஓடுகிறார். அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு நடிகைகள் செய்யும் சின்ன சின்ன குறும்பு செயல்கள் கூட வைரலாகிவிடுகிறது.

You'r reading ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் அலறிய மதுஷாலினி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவில் ரசாயன ஆலை தீ விபத்து - 22பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்