பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார்

Film writer associator Bakyaraj continues to be chairman

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்ப பெறுவதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்கியராஜ் இருந்து வந்தார். சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தின் கதை குறித்து உருவான சர்ச்சைக்கு பிறகு அவர் தமது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், பாக்கியராஜின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கபோவதில்லை என்று எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தம் முடிவில் உறுதியாக இருந்த பாக்கியராஜ், தாம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக சமாதானம் கூறினார்.

பாக்கியராஜ் இல்லாத சங்கத்தில் தாங்களும் தொடரப் போவதில்லை என்று திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக பாக்கியராஜ், சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் கே. பாக்கியராஜ் தொடருகிறார்.

You'r reading பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய பிரதேச முதல்வராக திங்களன்று பதவியேற்கிறார் கமல்நாத்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்