ஐபிஎல் தொடர் மூலம் அதிக வருமானம்... தோனியின் அடுத்த சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிக வருமானம் பெற்ற வீரராக சாதனையை படைக்கவுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியதன் மூலம் தோனி சுமார் ரூ.150 கோடிகளுக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 சீசன் வரை மகேந்திர சிங் தோனி ஐபிஎல் மூலமாக ரூ.137 கோடி வருமானமாக பெற்றிருந்தார். இதற்கிடையே, 2021 ஐபிஎல் டி20 சீசனுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரீடெயின் செய்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் பெற்ற வீரராக தோனி சாதனை படைத்துள்ளார்.

அதிக வருமானம் பெற்ற வீரரில், தோனிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 146.6 கோடிகளை ஐபிஎல் தொடர் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐபிஎல் தொடர் மூலம் அதிக வருமானம்... தோனியின் அடுத்த சாதனை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.. 100 புதிய சைனிக் பள்ளிகள்... பட்ஜெட்டில் அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்