ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை - துடிதுடித்து இறந்த வாலிபர்

சேரன்மாதேவியில் ஓட ஓட விரட்டி வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

சேரன்மாதேவியில் ஓட ஓட விரட்டி வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

நெல்லை மாவட்டம் சேரன்மா தேவி வடக்குநான்காம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்.அவருடைய மகன் தங்கபாண்டி (22). இவர் புதன்கிழமை இரவு 9 மணி அளவில் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வங்கி முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக கையில் அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் மர்மக் கும்பல் ஒன்று அங்கு வந்தது.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென்று தங்கபாண்டியனை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடம் இருந்து உயிர் பிழைக்க தங்கபாண்டி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச்சென்று வெட்டியது.

இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தங்கபாண்டியன் கொலை சம்பந்தமாக நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் குமார் என்பவர் சரணடைந்தார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

You'r reading ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை - துடிதுடித்து இறந்த வாலிபர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிரா சார்பில் பிரமாண்ட பொங்கல் விழா !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்