சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

Four youths arrested for raping a minor girl, Mannarkudi

மன்னார்குடியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் மரணத்துக்கு காரணமாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஊர் வடகோவனூர். அந்த ஊரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தாஸ், விஜய், அஜீ்த், முருகேஷ் ஆகிய 4 இளைஞர்கள் அந்த சிறுமியின் வீட்டு பக்கம் வந்தனர். சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட 4 பேரும், வீட்டுக்குள் புகுந்து அந்த சிறுமியை அடித்து கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின் அந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி கடும் மனஉளைச்சலில் இருந்தார். இந்நிலையில் திடீரென தனது பெற்றோர் கண்முன்னே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர் பதறி அடித்து தனது மகளின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்

சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிர் இழந்தார்.
கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமான அந்த 4 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

You'r reading சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தா?- உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை; தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்