தாய்லாந்தில் மனநலம் பாதித்தவரை அடித்து நொறுக்கிய புத்த துறவி

Monk attacks disabled man in thailand

தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் மனநலம் பாதித்த நபரை அடித்து நொறுக்கிய காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

தாய்லாந்தில் சமுத் பிரகான் என்ற கோயிலில் புத்த துறவியாக இருப்பவர் பரா சதித். கடந்த திங்கட்கிழமையன்று இந்தக் கோயிலில் மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த இளைஞரான நோக் என்பவரை பரா சதித் திடீரென சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் மனவளர்ச்சி குன்றிய நோக் காயமடைந்தார்.

நோக் தாக்கப்பட்ட காட்சிகள் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்த துறவிகள் என்றாலே அமைதியானவர்கள் என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்களுக்குள்ளும் ஒரு கோபக்கார சிங்கம் உறங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த நிகழ்வின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

You'r reading தாய்லாந்தில் மனநலம் பாதித்தவரை அடித்து நொறுக்கிய புத்த துறவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளி மாணவி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை: குழந்தை திருமணம் காரணமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்