கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில்

6 year jail for intimidating college girl student

திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

திருச்சி திலகர் தெருவை சேர்ந்த இளைஞர் அஜித்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியின் செல்போன் நம்பரை எப்படியோ தெரிந்து கொண்டு தொடர்ந்து வாட்ஸ்அப்பில் காதலிக்குமாறு அஜித் குமார் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

மேலும் வாட்ஸ்அப்பில் அவதூறும் பரப்பி உள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அஜித் குமார் மிரட்டும் தகவலை தனது வீட்டில் அந்த மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அஜித் குமார் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அஜித் குமாருக்கு எதிராக புகார் மகிளா நீதிமன்றத்தில் வழக்காக மாறியது. இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம், கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய அஜித் குமாருக்கு 6 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எண்ட்கேமில் அந்த சீன் இல்லை; இந்தியாவில் 24 மணி நேரம் திரையிடப்படுகிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

You'r reading கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அந்த ரகசியத்தை சொன்னால் என்னை ஏலம் எடுக்க மாட்டார்கள் – தோனி கூல் பதில்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்