சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை

police search 2 people for girl engaged in prostitution

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட இருவரை காஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

உத்திரமேரூரை அடுத்துள்ள ஒரு ஊரைச் சேர்ந்த அச்சிறுமியின் வீட்டில் கஷ்டம். இந்த சூழ்நிலையில் அந்த சிறுமிக்கு சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அந்த சிறுமியின் பெற்றோரிடம் வேளாங்கண்ணி என்ற பெண் ஆசை காட்டியுள்ளாள். இதனையடுத்து வேளாங்கண்ணியின் பேச்சை நம்பி தங்களது மகளை அவருடன் அச்சிறுமியின் பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

ஆனால் வேளாங்கண்ணி அச்சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈஸ்டரைக் கொண்டாட சொந்த ஊர் வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அந்த சிறுமியின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வேளாங்கண்ணி மற்றும் அவரது கூட்டாளி அற்புதராஜ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

You'r reading சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னடா இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்க… ரிலீசுக்கு முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்