பெண்ணை கொலை செய்து விட்டு நாடகமாடிய ரவுடி கைது

chennai rowdy arrested for murder woman

சென்னையில் பெண்ணை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது என நாடகமாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் பாலகுமாரி (வயது 40). கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனியாக பாலகுமாரி வாழ்ந்தார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான சின்னத்துரை என்கிற குட்டிக்கும் (வயது 46) பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இடையிலான நெருக்கம் அதிகமானதால் அவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் பாலகுமாரி இறந்து கிடப்பதாக, அவரது தாய்கங்கம்மா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் குட்டியிடம் பாலகுமாரி இறந்தது தொடர்பாக விசாரித்தனர்.

முதலில் தனக்கு எதுவும் தெரியாது என போலீசிடம் முதலில் நாடகமாடினான். பின், போலீசாரின் தங்கள் பாணியில் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். பாலகுமாரிக்கும், தனக்கும் மது பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், பாலகுமாரியின் கை மற்றும் கால்களை வெட்டினேன். கல்லால் அவளது மார்பு பகுதியில் பலமாக தாக்கியனேன். ஆனாலும் அவள் சாகவில்லை. எனவே தலையணையால் முகத்தில் அழுத்தி, மூச்சு திணற வைத்து பாலகுமாரியை கொடூரமாக கொன்றதாக போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தான். இதனையடுத்து குட்டியை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

மாதவன் வெளியிட்ட கொலைகாரன் ட்ரெய்லர்!

You'r reading பெண்ணை கொலை செய்து விட்டு நாடகமாடிய ரவுடி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்