சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவன் கைது

dindigul student arrested for attempting to rape the girl and kill her

திண்டுக்கல் அருகே 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிருபாநந்தன். 17 வயதாகும் கிருபாநந்தன் 12ம் வகுப்பு மாணவன். கடந்த 16ம் தேதியன்று, அதேபகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது கையில் மின் கம்பியை பிடித்திருந்தபடி பிணமாக மீட்கப்பட்டார். வீட்டில் சிறுமி இறந்து கிடந்ததை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுவன் கிருபாநந்தனுக்கும் மாணவி இறப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிருபாநந்தனை அவர்கள் கைது செய்தனர்.

வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட கிருபாநந்தன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சோ்க்கப்பட்டார்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி கைது

You'r reading சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவன் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு! - மு.க ஸ்டாலின் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்