மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் புதைத்த காமர கொடூரன் கைது

Kama Koduran arrested for sexually abusing the girl and buried in the well

தெலங்கானவில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொலை செய்து கிணற்றில் புதைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி, அதே பகுதியிலுள்ள வறண்ட கிணற்றில் கொலை செய்து புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவியின் உடலை மீட்டு, ஆய்வு செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஸ்ரீனிவாச ரெட்டி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். மேலும் ஏற்கனவே கல்லூரி மாணவி ஒருவரையும் இதே பாணியில் கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலையும் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து கிணற்றில் சோதனை செய்த போலீசார் கல்லூரி மணவியின் எலும்பு கூட்டை கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குற்றவாளியின் வீட்டை சூரையாடி, தீவைத்தனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சந்தித்த நபர்களிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை

You'r reading மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் புதைத்த காமர கொடூரன் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன்னமராவதி விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிக்கினான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்