குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்

குடும்பத் தகராறில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் திரிபுரா மாநிலத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தில் நடந்துள்ளது. திரிபுரா தலைநகர் அகர்தலா புறநகர் பகுதியில் வசித்து வருபவர் நாராயண் தாஸ். இவரது மனைவி ஜாயி சாஹி. இவரது சொந்த ஊர் தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற கிராமம் ஆகும். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நாராயண் தாசுக்கும், ஜாயி சாஹிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஜாயி சாஹி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இது நாராயண் தாசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாராயண் தாஸ் அம்பாசாவிலுள்ள தனது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஜாயி சாஹியின் தாய் கஜாலி சாஹி, நாராயண் தாசுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த நாராயண் தாஸ், தன்னிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தால் மனைவி மற்றும் மாமியாரை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்த அவரது இரண்டு குழந்தைகளும் அலறினர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் இருவரையும் வெட்டினார்.

இதில் தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதற்கிடையே சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து உடனடியாக வீட்டுக்குள் புகுந்த நாராயண் தாஸ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே போலீசார் அறைக் கதவை உடைத்து திறந்த போது நாராயண் தாஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிராமத்து பாணியில் சுவையான கறி குழம்பு செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்