மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. ரூ.400 பணம் வாங்கி திரும்பி அளிக்காத நண்பனை கொலை செய்த நபர் கைது!

ரூ.400 பணம் வாங்கி கொண்டு திரும்பி அளிக்காத நண்பனை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹஸ்நகரில் பாஹிம் மற்றும் சோனு என்ற இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, வழக்கம் போல் சோனுவிற்கு பாஹிம் 400 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடனை கொடுத்து விடுமாறு பலமுறை பாஹிம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வாங்கி கடன் பணம் ரூ.400 தருமாறு பாஹிம்விடம் நேற்று சோனு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் சோனு, பாஹிமை பலமாக போஸ்ட கம்பத்தில் தள்ளியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே பாஹிம் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இன்று, சோனுவை ஹில் லைன் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.400 பணத்திற்காக நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. ரூ.400 பணம் வாங்கி திரும்பி அளிக்காத நண்பனை கொலை செய்த நபர் கைது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொழில் செய்ய முடியல சைரனை பயன்படுத்தக் கூடாது.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வந்த மிரட்டல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்