விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காதலன்

காதலியை சுட்டுக்கொன்ற காதலன்

விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காவலர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்வேல், சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும், பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

செவிலியாக பணிபுரிந்து கொண்டிருந்த சரஸ்வதிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. சரஸ்வதி மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வந்தார். முதலில் இருவரும் காதலித்து வந்த நிலையில் மருத்துவப் படிப்புக்குப் பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் தெரிந்துள்ளது. அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சரஸ்வதியை பார்க்க கார்த்திக்வேல் அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

வாழ்த்து சொல்லிவிட்டு, இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென சரஸ்வதிக்கும் கார்த்திக்வேலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த காவலர் கார்த்திக்வேல், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலி சரஸ்வதியை சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கண்முன் அரங்கேறிய கொலையை பார்த்து சரஸ்வதியின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், கார்த்திக்வேல் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காதலன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 96 படத்தின் ஓபனிங் பாடல் வீடியோ வெளியீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்