இன்னும் வேணும்.. இன்னும் வேணும்.. அவள் கேட்டாள்: அவன் உயிர் துறந்தான்

Man Kills Himself, Note Says Woman Pestered Him For Sex

பாலியல் உறவு கொள்ளச் சொல்லி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் மனம் வெறுத்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பர்பானி என்ற ஊர். இங்கு சச்சின் மிட்கரி (வயது 38) என்பவர் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பர்பானியிலிருந்து வாஸ்மட் என்ற இடத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு வீட்டில் அவர் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை தாம் தங்கியிருந்த வீட்டில் சச்சின் மிட்கரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மிட்கரியின் உடலை உடற்கூறு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சச்சின் மிட்கரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் தம்முடன் பணிபுரியும் பெண் ஒருவர் பாலுறவுக்கு அடிக்கடி தம்மை வற்புறுத்துவதாகவும், மறுத்தால் குற்ற வழக்கில் பெயரை சேர்த்து விடுவதாக மிரட்டுவதாகவும், தமக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிந்தும் அடிக்கடி உறவுக்கு அழைக்கிறார் என்றும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

You'r reading இன்னும் வேணும்.. இன்னும் வேணும்.. அவள் கேட்டாள்: அவன் உயிர் துறந்தான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குருவித்துறை பெருமாள் கோயில் சிலைகள் மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்