திருமணத்திற்கு முன்பே காதல்! - குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை!

திருமணத்திற்கு முன்பே ஏற்பட்ட காதலால், மணமுடைந்த பெண் காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு முன்பே ஏற்பட்ட காதலால், மணமுடைந்த பெண் காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி [29]. இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ஆனால், புவனேஷ்வரி அதே பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் தெரிய வந்ததும்தான் தாய்மாமன் சுரேஷுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் ரித்திஷ் உடனான தொடர்பை புவனேஷ்வரி முறித்துக்கொள்ளாமல், தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விஷயம் சுரேஷுக்கு தெரிய வர புவனேஷ்வரியை கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த புவனேஷ்வரி திருவண்ணாமலை சென்று வருவதாக கூறிவிட்டு காதலன் ரித்திஷை சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து செங்கம் அருகேயுள்ள ஏரிக்கரையில் விஷம் அருந்தியுள்ளனர். இதனால், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading திருமணத்திற்கு முன்பே காதல்! - குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்