ஜார்கண்ட், டெல்லி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும்.. ஜவடேகர் பேட்டி.

Union Minister Prakash Javadekar said BJP will win in upcoming Jharkhand, Delhi polls

அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசனோ கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. அரியானாவிலும் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. அங்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்பது இழுபறியாக இருந்தாலும் மற்ற கட்சிகளின் ஆதரவில் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக கூட்டணியின் வெற்றி எதிர்பார்த்ததுதான். மகாராஷ்டிரா, அரியானாவைப் போல் அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலிலும் பாஜகவே அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்.

You'r reading ஜார்கண்ட், டெல்லி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும்.. ஜவடேகர் பேட்டி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிதம்பரம் ஜாமீன் விசாரணை.. நவ.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்