திருப்பூரில் மதிமுகவினர் தாக்குதலில் காயமடைந்த பாஜக பெண் நிர்வாகி சசிகலா!

Bjp lady attacked by mdmk persons in Tirupur

திருப்பூரில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மதிமுகவினர் நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கூச்சல் போட்ட பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்டார்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு வந்து எதிர்க்கூச்சலில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பாஜக மகளிரணி மாநில நிர்வாகியான சசிகலா வைகோவுக்கு எதிராக ஆவேச கூச்சலிட மதிமுகவினர் அவரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், வைகோ வைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

You'r reading திருப்பூரில் மதிமுகவினர் தாக்குதலில் காயமடைந்த பாஜக பெண் நிர்வாகி சசிகலா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'இடது காலுக்குப் பதில் வலது காலில் ஆபரேசன் செய்த புத்திசாலி டாக்டர்கள்' - ஒடிசாவில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்