மம்தாவின் மெகா பேரணி.. கொல்கத்தாவில் குவிந்த தொண்டர்கள்!

Mamata mega rally in Kolkata convex volunteers

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா நடத்தும் மெகா பேரணிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறவுள்ள மாநாட்டையொட்டி பிரமாண்ட பேரணியும் நடத்தப்படுகிறது.12 மணிக்கு பேரணி துவங்கும் நிலையில் அதிகாலை முதலே திரிணாமுல் தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் கொல்கத்தா நகரமே திக்குமுக்காடியுள்ளது.

மாநாட்டு ஏற்பாடுகளை மம்தா பானர்ஜி இன்று அதிகாலை நேரில் பார்வையிட்டார். மாநாடு நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் 30 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க. அல்லாத கட்சிகளை ஒன்றினைத்து மம்தா நடத்தும் இந்த மாநாடு தேசிய அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You'r reading மம்தாவின் மெகா பேரணி.. கொல்கத்தாவில் குவிந்த தொண்டர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொல்கத்தா பேரணி: மு.க.ஸ்டாலினை வரவேற்று திரிணாமுல் 'டிவீட்'!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்