அதெப்படி சிவகுமார சுவாமிஜிக்கு பத்ம விருது கொடுக்காமல் விடலாம்? மல்லிகார்ஜுன கார்கே கொந்தளிப்பு

Sivakumar Swamiji the Padma award can be given? Mallikarjun Kharge the turmoil

பெங்களூரு: லிங்காயத்து மடாதிபதியும் 111 வயதில் மறைந்தவருமான சிவகுமார சிவாஜியின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளதாவது:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கல்வித்துறையில் ஏராளமான சேவைகள் செய்தவர் சிவகுமார சுவாமிஜி.

ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி சேவைகளை செய்தவர். பாஜக அரசு அவருக்கு விருது எதுவும் வழங்காதது வருத்தம் அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைப் பாடுகிற பாடகருக்கு எல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களை எல்லாம் ஒப்பிடுகையில் நிச்சயம் சிவகுமார சுவாமிஜிக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

You'r reading அதெப்படி சிவகுமார சுவாமிஜிக்கு பத்ம விருது கொடுக்காமல் விடலாம்? மல்லிகார்ஜுன கார்கே கொந்தளிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 'முன் வரிசை மரியாதை.....'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்