ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல் தகனம் -குடும்பத்தினர், தலைவர்கள் இறுதி மரியாதை!

Family, friends, admirers bid emotional farewell to George Fernandes

மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் உடல் தகனம் இன்று டெல்லியில் நடந்தது. அவரது குடும்பத்தினரும்,முன்னாள் பிரதமர் மன்மோகன், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்

சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், 3 முறை மத்திய அமைச்சராகவும் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த செவ்வாய்க்கிழமை 88 வயதில் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.அமெரிக்காவில் உள்ள மகன் சீயன் வருகைக்காக பெர்னாண்டசின் உடல் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு சீயன் டெல்லி திரும்பிய நிலையில் இன்று பெர்னாண்டசின் உடல் தகனம் நடைபெற்றது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு லோதி எஸ்டேட் மின் மயானத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறிது நேரம் பார்வைக்கு வைக்கப்பட்டது. பெர்னாண்டசின் மனைவி லீலாகபீர், மகன் சீயன், சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன், பாஜ மூத்த தலைவர் அத்வானி, பீகார் முதல்வர் நிதீஸ்குமார், மத்திய அமைச்சர்கள் பஸ்வான், ஹர்ஷவர்தன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின் மின் மயானத்தில் பெர்னாண்டஸ் உடல் தகனம் செய்யப்பட்டது.

You'r reading ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல் தகனம் -குடும்பத்தினர், தலைவர்கள் இறுதி மரியாதை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளையராஜா பாராட்டு விழாவுக்கு தடை கிடையாது - உயர் நீதிமன்றம் உத்தரவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்