மெட்ரோ ரயில் நிலையத்தில் இளஞ்ஜோடிகள் நடத்தும் சில்மிஷங்கள் - சிசிடிவி பதிவு லீக் ஆனதால் சர்ச்சை!

Hyderabad metro video of intimate couples leaked

ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளஞ்ஜோடிகள் காதல் விளையாட்டு நடத்தும் உற்சாகக் காட்சிகளின் சிசிடிவி பதிவு லீக் ஆகி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் சர்ச்சையாகி உள்ளது.

ஐதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ரயில் நிலையங்களில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் ஆங்காங்கே பொறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் செல்ல எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆள் அரவம் இல்லாத நேரத்தில் இந்த எஸ்கலேட்டரில் ஹாயாக செல்லும் இளம் தம்பதிகள், காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபடுவது சகஜமாகி விட்டது.

இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி விடுகிறது. அந்தப்பதிவுகளை யாரோ லபக்கி சமூக வலைதளங்களில் பரப்பி விட்டது சர்ச்சையாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் மூன்று ஜோடிகள் நடத்திய வெவ்வேறு சல்லாபக் காட்சிகளின் பதிவுகள் வெளியானதால் மெட்ரோ நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மிகப் பாதுகாப்பாக வைக்கப்படும் சிசிடிவி பதிவுகள் வெளியில் கசிந்தது எப்படி? என்ற விசாரணைக்கும் ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

You'r reading மெட்ரோ ரயில் நிலையத்தில் இளஞ்ஜோடிகள் நடத்தும் சில்மிஷங்கள் - சிசிடிவி பதிவு லீக் ஆனதால் சர்ச்சை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ருசியான புதுவகை தக்காளி சட்னி.. சும்மா ட்ரை பண்ணி பாருங்க..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்